Saturday, October 11, 2014

To SP Udhayakumar

உதயகுமார் அவர்களுக்கு திறந்த மடல் ,

திரு ரஜினி அவர்களுக்கு தாங்கள் எழுதிய பகிரங்க அரசியல் எதிர்ப்பு மடல் பார்த்தேன் . மற்ற நடிகர்களின் (விஜய் ) ரசிகர்களை போல் தங்களை கெட்ட வார்த்தையில் அர்ச்சிக்க என்றும் நான் மதிக்கும் வணங்கும் ரஜினி அவர்கள எங்களை தூண்டியது இல்லை ...ஊடகங்கள் வெளியிட்ட ஒரு யூக செய்தியை வைத்து  தாங்கள் எழுதிய மடலுக்கு பதில் தர வேண்டியதால்  இதை எழுதுகிறேன் ..
இப்படி ஒரு ரசிகன் இருப்பான் என்று கூட அவருக்கு தெரிய வாய்பில்லை ..தவறு இருந்தால் மன்னிக்கவும் ..தங்களின் கூடன்குள போராட்டம் பற்றி நன்கு அறிவேன் ...அதனை மதிக்கிறேன் ..தங்களிடம் இருந்து இப்படி ஒரு கடிதத்தை எதிர்பார்கவில்லை ...இருந்தாலும் ..பதில் அளிப்பது எனது கடமை ..அவரிடம் இருந்து உங்களுக்கு மௌனம் தான் பதிலாக வரும்  என்று உறுதியாக எனக்கு தெரியும் ..ஏனென்றால் தன்னை பற்றி தானே பெருமையாக பேசாத பெருமகன் அவர் ...ஏன் தன்னை ஏசியவரையும்   மதிக்கும் மன்னன் ...மிகையாக நான் புகழ்வதாக நீங்க என்னலாம் ...இருக்கட்டும்

1) ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிக்கை கொடுத்தாரா ? மன்ற நிர்வாகிகளை சந்தித்தாக அபாண்டமான குற்ற சாற்றை கூறுகிறீர்கள் ..ஊடகங்கலும் அவரின் அரசியல் ப்றேவசம் பற்றி பொய் செய்தி போடுவது வாடிக்கையான ஒன்று தான் என்பது அனைவரும் அறிவர் ..அதற்கு தாங்கள் எழுதிய கடிதத்தின் பல எண்ணங்களை நான் மறுக்கிறேன் ..இந்த தருணத்தில்  தாங்கள் வெளியிட அவசியம் என்ன ?

2) தங்களுடைய கடிதம் செல்ல வேண்டிய இடம் ரஜினியா அல்லது சுய லாபத்திற்காக அரசியல் ஆசை உண்மையிலேயே இருக்கும்  விஜய் போன்ற நடிகருக்கா என்பதை தங்களின் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன் ..கடந்த இரண்டு வருடமாக நடப்பதை தாங்கள் அறீவீர்கள் ...2011 தேர்தலில் அணிலாக இருந்து அ தி மூ காவை  செய்ததாக தானாகவே சொல்லிகொண்டது யார்  என்றும் உங்களுக்கு தெரியும் ...அதே போல் ..ஏழை திருமணம் மற்றும் ரகசிய ரசிகர் சந்திப்பு போன்ற விளையாட்டை தன அரசியல் ஆசைக்காக நடத்தி ஏமாற்றும்  நடிகர் இருக்கும் தமிழ் நாட்டில் ...ரஜினி அவர்கள் கூட்டம் சேர்த்தால் மக்களுக்கு இடையூறு என்று ரசிகர்களை கூட சந்திகாதவர் ...ஏன் ...தன மகளின் திருமணத்திற்கு கூட வர வேண்டாம் என்று சொன்னவர் ...ஆனால் அதையும் விமர்சித்து அவரின் ரசிகரை பிரிக்க நினைத்தனர் ... ஆனால் எங்கள் தலைவன் எதை செய்தாலும்  அது எங்கள் நல்லதுக்காக தான் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் ...அதனால் தான் சொல்கிறேன் .... இன்றும் பெற்றோர் மதிக்கும் நல்ல பிள்ளைகளாக நாங்கள் வளர அவரின் வாழ்க்கையும் ஒரு காரணம் என்று  ஒவ்வொரு  ரஜினி ரசிகனக்கும் தெரியும் ...

3) அவரை  கன்னடர் என்று விமர்சித்துள்ளீர்கள் ...அவர் தமிழர் தான் என்று நான் வாதிட விரும்பவில்லை ...தமிழ்நாட்டை ஆள்வதற்கு தமிழன் என்ற தகுதி மட்டும் தேவை இல்லை ...நாட்டை சுரண்டி ஏமாற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவன் ஆள்வதை விட ...தூய எண்ணம் படைத்த மக்களுக்கு நல்லது செய்யும் யார் வேண்டுமானாலும் ஆளலாம். ..தயவு செய்து தமிழர் சாயம் பூசாதீர்கள் ...தமில் பேசும் அனைவரும் தமிழன் என்று தப்பு கணக்கு போடாதீர்கள் ..தமிழ் பேசும் துரோகிகள் இருக்கம் தமிழ்நாட்டில் தமிழனாக இல்லமால் தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் தமிழரே ...இதை ரஜினிக்காக சொல்லவில்லை...நான் மதிக்கும் ஏன் தாங்களே மதிக்கும் ...அதே கூடங்குளம் போராட்டத்திற்கு  தங்களுக்கு ஆதரவாக சிங்கம் போல் நிற்கும் வை கோ அய்யாவும் தான் ..அவர் பிறப்பால் தமிழர் இல்லை ..ஆனால் தமிழ்நாட்டிற்காகavar செய்யாத தியாகம் இல்லை ..செல்லாத சிறை இல்லை என்பதை அவரின் எதிரிகளே அறிவர் ..ஆகவே  ரஜினியின் பாதை வேறு வை கோவின் பாதை வேறு ..ரஜினி இனத்தால் தமிழர் இல்லாமல் இருக்கலாம் ..ஆனால் மனதால் என்றுமே பச்சை தமிழன் ..எங்கள் தலைவன் !
ஆம் உதவி செய்து வெளியில் சொல்லமால் இருப்பவன் என்றுமே சிறந்த தலைவன் தான் !


4) நதி நீர் இணைப்பிற்கு அவர் ஒரு கோடி கொடுத்தது குற்றமா ? என்னமோ நதி நீர் இணைத்தால் இந்தியாவிற்கு மட்டுமே நல்லது தமிழ் நாட்டிற்கு தீங்கு  என்று தாங்கள் பொய்யான மாயை உலகத்தில் இருப்பது என்ன ந்யாயம் அய்யா ? அவர் கொடுக்க முன் வந்ததே நதி நீர் இணைத்தால் காவேரி கரையில் என்றும் நீர் புரண்டோடும் என்ற நம்பிக்கையில் தான் என்பதை தங்களுக்கு மட்டும் அல்ல ரஜினியை விமர்சிக்கும் அனைவருக்கும் சொல்கிறேன்....இதை அவர் கூட சொன்னதில்லை ..இதே நதி நீர் இணைப்பிற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு என்பதையும் தங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் ...இதி இருந்து அவரை கன்னடர் என்று எப்படி நீங்கள் குறை சொல்லலாம் ..தன்னை வாழ வெய்த்த தமிழ் நாட்டிற்கு என்றுமே நன்றியோடு இருப்பவர் ...என்றும் தமிழர் !


5) இது உங்களுக்கான கேள்வி..இனத்தால் தமிழன் இல்லை என்று அவரை ஓரம் கட்டும் நீங்கள்..ஆம் ஆத்மி என்ற தேசிய கட்சியுடன் சேர்ந்தது ஏன் ? தனியாக நின்று இருந்தா தாங்கள் வெற்றி பெற்றிருக்கலாமே ?

6) இந்த கேள்வியை உங்களுக்கு வைக்க என் மனம் கேக்க வில்லை தான் ...ஆனால் தமிழ் மக்கள் கேட்பார்கள் ..அதற்கு முன் உங்களிடம் இருந்து இன்னொரு மடலை எதிர்பார்கிறேன் ..ரஜினிக்கு அல்ல சம்பந்தப்பட்ட அந்த நடிகருக்கு ...அரசியலுக்கு ரஜினி வருவேன் என்று சொல்வதுற்கு முன்னாலேயே அவரை விமர்சித்து அவசரமாக கடிதம் எழுதிய நீங்கள் ....அதே திரைப்பட துறையில் இருந்து கொண்டு ..அரசியல் ஆசையில் துடிக்கும் விஜய் போன்ற நடிகருக்கு தாங்கள் எதுவும் எழுதாமல் இருபது அவர் "ஜோசப் விஜய் " என்ற காரணத்தினாலோ என்று தமிழ் மக்கள் என்ன கூடும் ...அதற்கு முற்று புள்ளி வெயப்பீர்கள் என்று எதிர்பார்கிறேன் ... ஒரு வேலை செய்ய தவறினால்...தங்களிடம் இருக்கும் படை பலம் . மத பலம் என்னிடம் இல்லாமல் போகலாம் ....ஆனால் விஜய் போன்ற சுயநல அரசியல் செய்யும் நடிகருக்கு ஆதரவாக இருந்தீர்கள் என்ற அவச்சொல்லை ஒரு மானம் உள்ள தமிழனாக ஊழலுக்கு எதிரான தமிழனாக என்னால் தமிழ் நாட்டின் ஓவ்வொரு மூலையிலும் சென்று பரப்புவேன்...

7) தன் ரசிகன் எந்த்த கட்சியிலும் இருக்கலாம் என்று அறிவித்தவர் ...அதே போல் எங்களுக்கும் அவர் மீது விமர்சனம் இருந்தால் வெளிபடையாக பகிரும் உரிமை என்றும் உண்டு ...அனால் என்றும் எங்களால் அவரை வெறுக்க முடியாது ...ஏன் என்றால் யாருக்கும் தீங்கு நினைக்க கூடாது என்ற அடிப்படை எண்ணத்தை எங்கள் மனதில் புகுத்தியவன் எங்கள் ரஜினி...


இறுதியாக ..ரஜினி என்றும் பா ஜா காவை ஆதரிக்கவும் இல்லை காங்கிரசையும் ஆதரிக்கவில்லை ...அரசியலும் தாண்டி அவர் மனிதர் ....உதவி என்று தன வீடு வாசல் முன்பு வந்து நிற்கும் அனைவருக்கும் அவரால் உதவ முடிகிறதோ இல்லையோ ஆனால் அவருடைய கள்ளம் கபடம் இல்லாத அரவணைப்பு அனைவர்க்கும் உண்டு...என்ன சிரித்துகொண்டே செஞ்ச உதவிய "வெளியில சொல்லிட மாட்டீங்களே  " என்று செல்லமான கண்டிப்பு  மட்டும் வரும் ...அதனால் தான் அவர் என்றும் எங்கள் மனதில் வாழும் மன்னன் .!எங்களை ஆளும் தலைவன் !

.அவர் அரசியலுக்கு வந்து தான்  எங்களுக்கு தலைவன் ஆக தேவை இல்லை ...எங்கள் மனதில் என்றுமே அவர் தான் தலைவர்!



- இப்படிக்கு மானம் உள்ள தமிழன் ரஜினி ரசிகன் !













































Saturday, February 2, 2013

மனித நேயம் !




மதத்தை  உருவாக்கி !

மனிதரை  சாமியாக்கி ! 

மனிதனை  அழிக்க  துடிக்கும் மனிதா !

மலர வேண்டியது 

மதம் அல்ல, மனிதம்  !


நாத்திகம்  என்னும் சாதி உருவாக்கி !

சாக்ரடீசை  சாமியாக்கி !

சாமியை அழிக்க  துடிக்கும் மனிதா !

அழிய  வேண்டியது 

ஆத்திகம் அல்ல, ஆதிக்கம் !












Wednesday, June 22, 2011

மனம் போன போக்கிலே !!!

மனம் போன போக்கிலே குணம் சென்றது ,
குணம் சென்ற பாதையில் தினம் சென்றது ,

எதற்கு செல்கிறோம் என்று குணத்திற்கும் தெரியவில்லை !!
எங்கு செல்கிறோம் என்று மனதிற்கு புரியவில்லை !!

என்னருகே வா என்றது பணம் !!

செல்லாதே என்றது குணம் !!
சென்று தான் பாப்போம் என்றது மனம் !!

மனப்பால் குடித்து வாழாதே என்று
இதை தான் சொல்கிறார்களோ ??

Thursday, June 3, 2010

Started my blog on 06/03/2010

Started my blog on 06/03/2010